திருநெல்வேலி மாவட்டம் கூந்தகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது அதிக எண்ணிக்கையில் வலசைபறவைகள் வரத் துவங்கியுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மரங்களின் மீது பறவைகள் கூடுகட்டி அடை காக்கின்றன.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
புதுச்சேரியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தபால் ஓட்டுகளை போட்டனர். உப்பளம் தொகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ஓட்டை போட்ட காட்சி.