இளம் தொழில் முனைவோருக்கான பயிலரங்க கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது. அதில் கோவை பிரிக்கால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன் பேசினார். அருகில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள்.
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.