பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருப்பு கொடி காட்டுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட காங்., நிர்வாகிகளை வெளியில் வரவிடாமல் போலீசார் அலுவலகத்திலேயே சிறை வைத்தனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.