திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி பகுதியில் லோக்சபா தேர்தலையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் வாசகம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிந்து ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
உலக மலை ரயில் பாரம்பரிய தின நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்தது. இந்த நாளில் மலை ரயிலில், ஊட்டிக்கு மகிழ்ச்சியில் செல்லும் சுற்றுலா பயணி.
சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக, மை வைத்த விரலை காட்டி வாக்காளர்கள் இலவசமாக டீ குடிக்கலாம் என சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் பேனர் வைத்துள்ளனர். இது ஓட்டு போடுவதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு உற்சாகமான முயற்சி என்கிறார் அந்த கடைக்காரர்.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.