மேட்டுப்பாளையம் சிவபுரம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீ ஐயப்பன் சேவா சமிதியின் 64 ஆவது ஆண்டு விழா மற்றும் மண்டல மகோற்சவ விழாவில் திருச்சூர் புஞ்சமக்கள் குழுவினரின் வண்ண மயில்கள் நடனம் நிகழ்ச்சி ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது . இரவு விநாயகர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.