sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

/

டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

7


UPDATED : ஆக 16, 2025 07:07 AM

ADDED : ஆக 16, 2025 12:55 AM

Google News

7

UPDATED : ஆக 16, 2025 07:07 AM ADDED : ஆக 16, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலாஸ்கா: அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ''பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது'' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

' உக்ரைனுக்கு எதிராக, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் உக்ரைன் - -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வரும் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய அதிபர் புடின் சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக் கொண்டார். அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் டிரம்ப் - புடின் இன்று (ஆக.16) சந்தித்து பேச்சு நடத்த திட்டமிடப்பட்டது.

3 மணி நேர பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். தொடர்ந்து அதே பகுதிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனி விமானத்தில் வந்திறங்கினார். முதலில் விளாடிமிர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். ''இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் -புடின்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இருவரும் மீண்டும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது: எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் நேட்டோவையும், ஜெலன்ஸ்கியையும் அழைத்து பேசுவேன். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும், என்றார்.

முடிவு எட்டப்படவில்லை

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. முடிவு எட்டப்பாவிட்டாலும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது. வெளிப்படையாக பேசினோம், என்றார்.






      Dinamalar
      Follow us