sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இரு உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்ய படை

/

இரு உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்ய படை

இரு உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்ய படை

இரு உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்ய படை


ADDED : ஆக 25, 2025 12:32 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பேச்சு நடத்தினார்.

இதில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடர்ந்து முன்னேறி வருவதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களான செரெட்னே மற்றும் கிளெபன் பைக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைனின், 34வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில், மேற்கு குர்ஸ் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, ரஷ்யா கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us