sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

/

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

2


ADDED : ஆக 29, 2025 05:38 PM

Google News

2

ADDED : ஆக 29, 2025 05:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ''ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கையெழுத்து

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி , ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபா இல்லத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜப்பான் இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், இரு நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர். இதன பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வலு

இதன் பிறகு பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய எங்களின் கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமானதாகவும், நோக்கம் உள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய ஜனநாயகம் மற்றும் உயிருள்ள ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்களின் கூட்டாண்மை இரு நாடுகளுக்கு மட்டும் அல்ல உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உலக அமைதி பாதுகாப்புக்கு இந்தியா ஜப்பான் இணைந்து செயல்படும். ஜப்பானுடனான பொருளாதார உறவ வலுவாக உள்ளது

சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயகங்கள் இயற்கையின் பங்காளிகள். இன்று எங்களின் கூட்டாண்மை, ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்துக்கு அடித்தளமிட்டு உள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு வரைபடத்தை வகுத்துள்ளோம். எங்கள் தொலைநோக்கு பார்வையின் மையமாக, முதலீடு, புதுமை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியன உள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பானின் 6 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு ,நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்தியா - ஜப்பான் வணிக கூட்டமைப்பிலும், ஜப்பானிய நிறுவனங்களிடம் நான், ' இந்தியாவில் தயாரியுங்கள். உலகத்துக்காக தயாரியுங்கள்,' எனக்கூறியுள்ளேன்.

முக்கிய திட்டம்


உயர் தொழில்நுட்ப துறையில், ஒத்துழைப்புக்கே எங்களுக்கு முக்கியமான இலக்கு. இதில், டிஜிட்டல் ஒத்துழைப்பு 2.0, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு திட்டங்கள் ஆகியன எடுத்துக் கொள்ளப்பட ள்ளன. செமி கண்டக்டர் மற்றும் அரிய வகை தாது வளங்கள் ஆகியன எங்களின் முக்கிய திட்டங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






      Dinamalar
      Follow us