sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

/

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

4


ADDED : ஆக 05, 2025 09:03 AM

Google News

4

ADDED : ஆக 05, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

'சில்மிஷ' மத போதகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கிறிஸ்துவ சபை ஒன்றில், மூலச்சல் பகுதி வர்கீஸ், 55, என்பவர் போதகராக உள்ளார். இவர், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, வேதாகம வகுப்பிற்கு வந்த, 17 வயது சிறுவன், போலீசில் புகார் செய்தார். தக்கலை போலீசார், போக்சோவில் வர்கீசை நேற்று கைது செய்தனர்.

காமுக பெயின்டருக்கு 'கம்பி'

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூரிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் பெயின்டர் ரவிச்சந்திரன், 45. இவர், தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சிறுமியின் பாட்டி புகாரின் படி, ஆரணி போலீசார், ரவிச்சந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.



வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலுார் மாவட்டம், பீல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித், 19. இவர், பத்தாம் வகுப்பு படித்த, 15 வயது மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, 2022, மார்ச்சில் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். இதில், மாணவி கர்ப்பமடைந்தார். புகாரில், அஜித்தை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மகளிர் நீதிமன்ற நீதிபதி, அஜித்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us