sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.பி.ஆர்.ஓ.,வாக தி.மு.க.,வினரை  நியமிப்பதா? எதிர்த்து அ.தி.மு.க., மனு!

/

ஏ.பி.ஆர்.ஓ.,வாக தி.மு.க.,வினரை  நியமிப்பதா? எதிர்த்து அ.தி.மு.க., மனு!

ஏ.பி.ஆர்.ஓ.,வாக தி.மு.க.,வினரை  நியமிப்பதா? எதிர்த்து அ.தி.மு.க., மனு!

ஏ.பி.ஆர்.ஓ.,வாக தி.மு.க.,வினரை  நியமிப்பதா? எதிர்த்து அ.தி.மு.க., மனு!


ADDED : ஜூலை 26, 2025 10:33 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, தி.மு.க.,வினரை நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் தொடர்பாக, விதிகளில் திருத்தம் செய்து, 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், தி.மு.க., - ஐ.டி., பிரிவை சேர்ந்தவர்களை, ஏ.பி.ஆர்.ஓ., எனும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்க முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜெய பிரகாஷ் நாராயணன், தமிழ்செல்வன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, தி.மு.க.,வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரை நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது.

இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியான வர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில், எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us