sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்

/

 இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்

 இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்

 இளைஞர் இலக்கிய திருவிழா ஆலோசனைக் கூட்டம்


ADDED : டிச 24, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் இளைஞர் இலக்கிய திருவிழா போட்டிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்து.

நுாலகத்துறை சார்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளைஞர் இலக்கிய திருவிழா போட்டிகள் வரும் ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது.

விழாவில், வினாடி வினா, விவாத மேடை, ஓவியம், பேச்சு போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழ் நுால் அறிமுகம், பிராம்ப் இன்ஜினியரிங், பேச்சு போட்டி, உடனடி ஹைக்கூ என 10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 5,000, 4,000, 3,000 ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் எம்.ஜி.ஆர்.அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் செல்வராணி தலைமை தாங்கினார். மயிலம் தமிழ்க் கல்லுாரி முதல்வர் (ஓய்வு) சற்குணம் சிறப்புரையாற்றினார். கல்லுாரி நுாலகர் மணிவண்ணன் வரவேற்றார்.

நுாலக வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன், மாவட்ட நுாலக அலுவலர் இளஞ்செழியன் வாழ்த்தி பேசினார். நல் நுாலகர் அன்பழகன் போட்டிகள் குறித்து விளக்க உரையாற்றினார். நுாலகர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நுாலகர் வேல்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us