sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊடக உலகில் முக்கிய பங்களிப்பு ரவிக்குமார் எம்.பி., வாழ்த்து

/

ஊடக உலகில் முக்கிய பங்களிப்பு ரவிக்குமார் எம்.பி., வாழ்த்து

ஊடக உலகில் முக்கிய பங்களிப்பு ரவிக்குமார் எம்.பி., வாழ்த்து

ஊடக உலகில் முக்கிய பங்களிப்பு ரவிக்குமார் எம்.பி., வாழ்த்து


ADDED : செப் 07, 2025 05:20 AM

Google News

ADDED : செப் 07, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தினமலர், தமிழக மக்களின் அரசியல் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக, ரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

கடந்த, 1951ம் ஆண்டில் துவங்கப்பட்ட தினமலர், உடனுக்குடனான செய்திகள், ஆழமான பகுப்பாய்வுகள், அரசியல் விமர்சனங்கள் முதலானவற்றை வாசகர்களுக்கு வழங்குகிறது.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்யும் தினமலர், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முன்னணி பங்கு வகிக்கிறது. இதன் எளிய மொழியும், கூர்மையான அரசியல் நையாண்டியும் கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற வாசகர்கள் வரை அனைவரையும் ஈர்க்கின்றன. இதன் ஆன்லைன் பதிப்பும், மொபைல் செயலியும் இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளன.

தமிழ்நாட்டின் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தினமலர் இப்போது பவளவிழா காண்கிறது. ஊடக உலகில் இது மென்மேலும் வளர்ந்து நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us