/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த 4 ஐம்பொன் சிலைகள்
/
கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த 4 ஐம்பொன் சிலைகள்
கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த 4 ஐம்பொன் சிலைகள்
கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த 4 ஐம்பொன் சிலைகள்
ADDED : ஆக 06, 2025 12:33 AM

வேலுார்:வேலுார் அடுத்த அன்பூண்டி கிராமத்தில் திருத்தாளீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணியின்போது, நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
வேலுார் அடுத்த அன்பூண்டியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 1,000 ஆண்டு பழமையான, சோழர் காலத்து திருத்தாளீஸ்வரர் கோவில் உள்ளது. இது பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளதால், அதை, அறநிலையத்துறை சார்பில், 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணி தொடங்கியது.
அப்போது, விநாயகர், அம்மன், விஷ்ணு, நடராஜர் என. 2 அடி உயர, நான்கு ஐம்பொன் சிலைகள், மண் அரித்த நிலையில் கிடைத்தன. வேலுார், வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டனர். இந்நிலையில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவர்கள் அனுமதியளித்த பின், கோவிலில் அடுத்த கட்ட பணி தொடங்க உள்ளது.