
நொய்யல் ஆற்றில் குப்பை ஆலங்காட்டில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் முழுவதும் குப்பையை கொட்டி குவித்து விடுகின்றனர். இந்த குப்பை காற்றில் பறந்து, குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. குப்பையை தரம் பிரித்து வாங்க முன்வந்தாலும், மக்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ஈ, கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சுகாதார கேட்டால் நோய் தொற்று அபாயம் உள்ளது.
- நேத்ரா,
ஆலாங்காடு.
துப்புரவாளரும் மனிதர்களே குப்பையை பெற அன்றாடம் மாநராட்சி துாய்மை பணியாளர்கள் வருகின்றனர். மக்கள் பிரித்து கொடுப்பதில்லை. பணியில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாங்குகின்றனர். குப்பையை முறையாக பிரித்து கொடுக்க வேண்டும்.
- லட்சுமி,
காலேஜ் ரோடு.
பிளாஸ்டிக் கழிவு ஒழியணும் திருப்பூரில் பிளாஸ்டிக்பை களின் பயன்பாடு அதிகமாக உள் ளது. இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதனால், மண்ணுக்கும், மக்களுக்கும் சீர்கேடு. துணி பை, பேப்பர் பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டால், குப்பைகள் அதிகரித்துள்ளது. இதனால், வருங்கால தலைமுறையினர் பாதிப்பு ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறோம். பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும்.
- ராஜேஸ்வரி,
சாமுண்டிபுரம்.
எங்கும் துர்நாற்றம் வார்டு பகுதியில் குப்பை எடுக்க பணியாளர்கள் எட்டி பார்ப்பதில்லை. எங்கு பார்த்தாலும் குப்பையாக, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர் பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜமுனா,
மண்ணரை.
நோய் பரவும் அபாயம் குப்பை பிரச்னையால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, வணிக நிறுவனங்கள் அருகே மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது.
- வெங்கடேஷ்,
மண்ணரை.