/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக்க யோசனைகள்
/
திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக்க யோசனைகள்
ADDED : ஆக 25, 2025 12:31 AM

திடக்கழிவு ஆலோசகர் பேராசிரியர் வீரபத்மன் கூறியதாவது:
திருப்பூரில் சேகர மாகும் கழிவுகள் குறித்து, மூன்று விதமாக ஆய்வு செய்தோம். நுாறு கிலோவுக்கு மேலான குப்பை; புறநகரில் சேகரமாகும் குப்பை; வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பை. இங்கு முறையாக மறுசுழற்சி செய்ய எந்தவிதமான வசதிகளும் இல்லை. இங்கு இடமில்லாமல் உள்ளது.
உணவு கழிவுகள் இல்லாத, மற்ற குப்பைகளை கொடுத்தால், நாங்கள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பலாம். அதேசமயம் கழிவுகள் சரியாக ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான பிளான்ட் வாளையாறு(120 டன்) மற்றும் பொங்குபாளையத்தில்(45 டன்) அமைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அமைக்கும் போது, அரசால் இது சாத்தியப்படும். 45 டன் சுத்திகரிக்கும் வகையில் அமைக்கும் பிளான்ட்டுக்கு, 1.25 கோடி ரூபாய் செலவானது. அரசு செய்யும் போது, பெரிய அளவில் பிளான்ட்டை தாராளமாக அமைக்கலாம். 100 கிலோவுக்கு மேல் குப்பையை உற்பத்தி செய்யும், 5 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன.
அவர்கள் தங்கள் கழிவுகளை நேரடியாக பிளான்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நடைமுறை. 65 சதவீதம் குப்பை ரோட்டுக்கு வராது.
கழிவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மண்டல வாரியாக இதைச் செய்யலாம். ஒரு வாரத்தில் இது முழுவதுமாக சுத்தமாகி விடும்.
தனி நிறுவனம் தேவை துப்புரவாளன் அமைப்பின் இயக்குனர் பத்மநாபன் கூறியதாவது:
மாநகராட்சி நேரடியாக திடக்கழிவு மேலாண்மையை கவனிப்பது சிரமம். அரசு கண்காணிப்பில் பிரைவேட் லிமிடெட் போன்று தனி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இதை, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் அமைக்க வேண்டும். குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சி செய்யும் வகையில் அமைக்க வேண்டும். 50 முதல், 100 ஏக்கர் வரை, ஒரே இடத்தில் இந்த திட்டத்துக்கான அதிநவீன மெஷின்கள் மூலம் பிளான்ட் அமைக்க வேண்டும்.
உதாரணமாக, குப்பையை வாங்கும் போதே பிரித்து வாங்க வேண்டும். 250 வீட்டுக்கு ஒரு வாகனம், என வார்டுக்கு, 20 வாகனங்கள் வழங்கி, அதற்கான பணியாளர்களை ஒதுக்கி, சேகரித்து வரும் குப்பையை, ஒரு பெரிய கன்டெய்னரில் மாற்றி, பிரதான மையத்துக்கு அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இனிமேலாவது இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண மாநகராட்சி முனைப்பு காட்ட வேண்டும்.