/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
/
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்
ADDED : ஆக 28, 2025 06:55 AM

திருப்பூர்: 'தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடிக்கு, சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதம்:
அமெரிக்காவின், 50 சதவீத வரி உயர்வால், திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதியில், 35 சதவீத பங்களிப்புள்ள அமெரிக்காவில், அபரிமிதமான வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் தொகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பால், திருப்பூருக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்; பொருளாதார ரீதியான பாதிப்பும் ஏற்படும். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா, நுால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை, தொழில்துறையினர் வெற்றிகரமாக கடந்து வந்தனர். அமெரிக்க வரி உயர்வு விரைவாக குறைக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில், ஈடுசெய்ய முடியாத அளவுக்கு தொழில்துறையில் நஷ்டம் ஏற்படும்.
மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கான மின்சாரம், போக்குவரத்து செலவுகளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும். ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமையை குறைக்க, வட்டி மானிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்பீடு வாயிலாக, ஏற்றுமதியாளர்களுக்கான மூலதன தேவையை பூர்த்தி செய்ய நிதி உதவி கிடைக்க வேண்டும். அதற்காக, கடன் திட்டங்களைஅறிவிக்க வேண்டும். அமெரிக்காவுக்கு மாற்றாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய உரிய சலுகை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் வரி உயர்வு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, உலக வர்த்தக அமைப்பை இந்தியா நாட வேண்டும். ஆயத்த ஆடை தொழிலை பாதுகாக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.