sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை

/

எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை

எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை

எலும்பை பதம் பார்க்க காத்திருக்கும் சாலை


ADDED : அக் 20, 2025 10:44 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருள்மயம்

தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எரியாத விளக்குகளை மாற்ற வேண்டும்.

- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)

'ஒளி'மயம்

கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர் சந்திப்பில், பகலிலும் தெருவிளக்குகள் எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- யோகேஷ், எம்.எஸ்., நகர். (படம் உண்டு)

அவலம்

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுகிறது. அரசு அலுவலகம் முன்பே நிலை இவ்வாறு இருக்கிறது.

- கிரீஸ், கோர்ட் வீதி. (படம் உண்டு)

அடைப்பு

கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - திருவள்ளுவர் நகர் சாலை, பாரியூர் அம்மன் நகரில், பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.

- குமார், பாரியூர் அம்மன் நகர். (படம் உண்டு)

அபாயம்

காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, எம்.சி., நகர் முதல் வீதியில், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழி சரிவர மூடவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.

- பாபுதரன், எம்.சி., நகர். (படம் உண்டு)

வீணாகிறது

அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)

-----------

ரியாக் ஷன்

சீரமைப்பு

ஆலங்காடு எட்டாவது வீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது குறித்து 'தினமலர்' நாளிதழில் வெளியானது. குழாய் வரும் பாதையில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டதால், தண்ணீர் வினியோகம் சீராகியுள்ளது.

- அருணாசலம், ஆலங்காடு. (படம் உண்டு)

அகற்றம்

திருநீலகண்டபுரம், பாப்பன் நகரில் குப்பைத்தொட்டியில் குப்பை நிறைந்திருந்தது. மாநகராட்சி ஊழியர் மூலம் குப்பை அகற்றப்பட்டு விட்டது.

- சக்திவேல்பிரகாஷ், திருநீலகண்டபுரம். (படம் உண்டு)

ஒளிர்கிறது

மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்திருந்தது. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

- ஆனந்தராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us