/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் ஓணம் விழா குட்டீஸ் குதுாகலம்
/
பள்ளியில் ஓணம் விழா குட்டீஸ் குதுாகலம்
ADDED : செப் 07, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பல்லடம் ஊஞ்சப்பாளையம் வேதாந்தா அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி, சமுதாய ஒற்றுமையை விளக்கும் வகையில், வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலம் வரையப்பட்டது. மேலும், நடனம், பேச்சு, நாடகம், ஆகிய கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், பெற்றோர்களுக்கு தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் ஓம் சரவணன், பள்ளி முதல்வர் ஈஸ்வரி மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.