/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
/
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
ADDED : ஆக 12, 2025 05:22 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த, 5 நாட்களாக பலத்த மழையால், மழை நீர், அட்டாறு நதியில் வெள்ளமாக ஓடுகிறது. இது, சடையனுார் என்ற மலை கிராமத்தில் ஜலகம்பாறை என்ற இடத்தில், 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது.
இந்த ஜல-கம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க, பல பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நீர்-வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், அதில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று காலை, நீர்வீழ்ச்-சிக்கு செல்லும் வழியில், திடீர் மண் சரிவு ஏற்பட்டு போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டுள்ளது.