ADDED : டிச 23, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 442 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கு, காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

