sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

/

 இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

 இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

 இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


ADDED : டிச 23, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: தச்சூர் - சித்துார் வரையிலான ஆறுவழி சாலையில், பள்ளிப்பட்டு அருகே இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் - ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இச்சாலை வழியாக எண்ணுார் துறைமுகம் முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை விரைவு சாலை வசதி கிடைக்கும்.

துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்து விரைவாக கையாளப்படும். ஆறு வழிச்சாலை பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பள்ளிப்பட்டு அருகே குமாரராஜபேட்டையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த இணைப்பு சாலை வாயிலாக பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களை சேர்ந்தவர்கள், ஆறுவழி சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும்.

பள்ளிப்பட்டுக்கு அடுத்தபடியாக, திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில், நகரி அருகே குறுக்கிடும் இந்த ஆறுவழி சாலையில், இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us