/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை
/
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை
நெடுஞ்சாலை பராமரிப்பு பணி: திருத்தணியில் இன்று மின் தடை
ADDED : டிச 23, 2025 01:26 AM
திருத்தணி: திருத்தணி - அமீர்பேட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடந்து வருவதால், இன்று மின்கம்பங்கள் மாற்றப்படுகிறது. இதனால், அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் ஞானஅருள்ராஜ் கூறியதாவது:
திருத்தணி உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள திருத்தணி கார்த்திகேயபுரம் - மின்னல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 1.5 கி.மீ.,க்கு உள்ள ஒருவழிச்சாலையை, இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
எனவே, சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இன்று மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், காலை 9:00 - மாலை 5:00 மணி வரை, கார்த்திகேயபுரம் சாலை, கண்ணன் நகர், நேதாஜி நகர், பெரியார் நகர் மற்றும் கவுரி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

