sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்

/

பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்

பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்

பாழாகும் அரசு கட்டடங்கள் ஸ்ரீகாளிகாபுரத்தில் அவலம்


ADDED : ஆக 31, 2025 02:19 AM

Google News

ADDED : ஆக 31, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஸ்ரீகாளிகாபுரத்தில் அரசு பள்ளி எதிரே அமைந்துள்ள நுாலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் பயனின்றி வீணாகி வருகின்றன. இதனால், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஸ்ரீகாளிகாபுரம் அரசு தொடக்க பள்ளியை ஒட்டி, ஊராட்சி நுாலக கட்டடம், கிராம சுகாதார மையம், ஊராட்சி சேவை மைய கட்டடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இக்கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் பயன்பாடின்றி சீரழிந்து வருகின்றன.

பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம சேவை மைய கட்டடங்கள் பயனின்றி வீணாகி வருகின்றன.

ஆனால், அரசு தொடக்க பள்ளி எதிரே உள்ள நுாலகம் பயனின்றி கிடப்பது தான் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுாலக கட்டடத்திற்கு, 'அறிவை வளர்க்கும் நுாலகம்' என, பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, நுாலக கட்டடம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டடங்களையும் சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us