/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் ரேஷன் கடைக்கு ஒதுக்கப்படுமா?
/
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் ரேஷன் கடைக்கு ஒதுக்கப்படுமா?
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் ரேஷன் கடைக்கு ஒதுக்கப்படுமா?
திறக்கப்படாத பல்நோக்கு கட்டடம் ரேஷன் கடைக்கு ஒதுக்கப்படுமா?
ADDED : ஆக 31, 2025 02:18 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம், ஐந்து மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. அதை, சரண்யா நகர் ரேஷன் கடைக்கு ஒதுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை அண்ணா நகர் பகுதியில், பாழடைந்த கட்டடத்தில் சரண்யா நகர் ரேஷன் கடை இயங்கி வந்தது. அதை இடித்து, 10 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து ஐந்து மாதங்களான நிலையில், தற்போது வரை அந்த கட்டடம் பயன்படுத்தபடாமல் பூட்டியே கிடக்கிறது.
தற்போது, சரண்யா நகர் ரேஷன் கடை, அதே பகுதியில் மற்றொரு பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.
மேலும், போதிய இடவசதி இல்லாததால், பயனாளிகள் தவித்து வருகின்றனர். இதனால், ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிதாக அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை, உடனடியாக சரண்யா நகர் ரேஷன் கடைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.