/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோதனைச்சாவடி வழித்தடங்களை மறைத்து நிறுத்தப்படும் லாரிகளால் நெரிசல்
/
சோதனைச்சாவடி வழித்தடங்களை மறைத்து நிறுத்தப்படும் லாரிகளால் நெரிசல்
சோதனைச்சாவடி வழித்தடங்களை மறைத்து நிறுத்தப்படும் லாரிகளால் நெரிசல்
சோதனைச்சாவடி வழித்தடங்களை மறைத்து நிறுத்தப்படும் லாரிகளால் நெரிசல்
ADDED : ஆக 31, 2025 02:36 AM

கும்மிடிப்பூண்டி:மாநில எல்லையோர சோதனைச்சாவடி வழித்தடங்களை மறைத்து நிறுத்தப்படும் லாரிகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது.
இங்கு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் சரக்கு வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில், போக்குவரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைச்சாவடி வழித்தடங்களை கடக்கும் போது, அங்கு அமர்ந்திருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், சரக்கு வாகனத்தின் ஆவணங்களை பெற்று கொள்கின்றனர்.
சரக்கு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆவணம் சரிபார்க்கும் இடத்திற்கு ஓட்டுநர் வர வேண்டும். இதையே காரணமாக வைத்து, சோதனைச்சாவடியின் அனைத்து வழித்தடங்களையும் மறைத்தபடி, சரக்கு வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால், பின்னால் வரும் பிற வாகனங்கள் சோதனைச்சாவடியை கடக்க முடியாமல் போக்கு வரத்து பாதிக்கிறது. எனவே, போக்குவரத்து துறை அலுவலர்கள், வாகனங்களின் ஆவணங்களை பெறும் போதே, வாகனங்களை ஓரமாக நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என, மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.