/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரவு நேர அவசர சிகிச்சையில் கூடுதல் கவனம் தேவை: கலெக்டர்
/
இரவு நேர அவசர சிகிச்சையில் கூடுதல் கவனம் தேவை: கலெக்டர்
இரவு நேர அவசர சிகிச்சையில் கூடுதல் கவனம் தேவை: கலெக்டர்
இரவு நேர அவசர சிகிச்சையில் கூடுதல் கவனம் தேவை: கலெக்டர்
ADDED : டிச 24, 2024 11:19 PM
திருவள்ளூர்:இரவு நேர அவசர சிகிச்சையினை உரிய முறையில் கவனமாக அளிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவையினை குறைவின்றி வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை உரிய முறையில் வழங்க வேண்டும். மகப்பேறு, மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், அரசு மருத்துவ கல்லாரி முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ், பிரபாகரன், துணை இயக்குனர் சேகர் - குடும்ப நலம், சங்கீதா - காச நோய் உட்பட பலர் பங்கேற்றனர்.

