sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இலவச மது, பணம் கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை தேவை டாஸ்மாக் பணியாளர்கள் மனு 

/

இலவச மது, பணம் கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை தேவை டாஸ்மாக் பணியாளர்கள் மனு 

இலவச மது, பணம் கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை தேவை டாஸ்மாக் பணியாளர்கள் மனு 

இலவச மது, பணம் கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை தேவை டாஸ்மாக் பணியாளர்கள் மனு 

1


ADDED : ஆக 26, 2025 04:22 AM

Google News

ADDED : ஆக 26, 2025 04:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பணம், மது கேட்டு மிரட்டும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில்

டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கோபிநாத் தலைமையில் சங்கத்தினர் வழங்கிய மனுவில், ' மாவட்டத்தில் 81 டாஸ்மாக் கடைகளிலும் தினமும் நிருபர்கள் என்ற போர்வையில் மது கேட்டும், பணம் கேட்டும் சிலர் அத்துமீறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன் ஜி.உசிலம்பட்டியில் நிருபர்கள் என கூறி விஜயலிங்கராஜா, ஹரிஹரன், ஜெகதீசன் ஆகியோர் விற்பனையாளரை தாக்கினர். டாஸ்மாக் கடைகளில் இலவசமாக மதுகேட்டும், பணம் கேட்டும் தொந்தரவு செய்யும் போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.

வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டு நடுத்தெரு முத்துப்பாண்டி மனுவில், 'எங்கள் கிராமத்திற்கு தாடிச்சேரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. சில மாதங்களாக அடிக்கடி பழுது ஏற்பட்டுகிறது. அல்லது குழாய் உடைகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்றிருந்தது.

தீக்குளிக்க முயன்ற முதியவர்: கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் சோதனை செய்கின்றனர். ஆனால், மற்றொரு நுழைவாயிலில் சோதனை இல்லை. இதனால் சிலர் இந்த வழியாக பாட்டிலில் பெட்ரோலுடன் வருகின்றனர். குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,விடம்ஒரு முதியவர் மனு அளித்தார். பின் நுழைவாயில் அருகே வந்தவர் கொண்டுவந்த பையில் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வெளியே எடுத்து தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாட்டிலை பறித்தனர். பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இம்முடிவு எடுப்பதாக கூச்சலிட்டார்.

போலீஸ் விசாரணையில், அவர் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி நடுத்தெரு குருசாமி என தெரிந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தொடர்பாக மனு அளித்து தெரிந்தது.






      Dinamalar
      Follow us