ADDED : செப் 07, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: காவலர் தினத்தை முன்னிட்டு போடியில் கோட்ட அளவிலான விளையாட்டு, கலை நிகழ்ச்சி போட்டிகள் ஏ.டி.எஸ்.பி., காலை கதிரவன் தலைமையில் நடந்தது. போடி டி.எஸ்.பி., சுனில் முன்னிலை வகித்தார்.
போலீசார் குடும்ப அளவிலான விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, உலகநாதன், அய்யம்மாள் ஜோதி, பாலாண்டி, எஸ்.ஐ., க்கள் குரு கவுதம், பாண்டிச்செல்வி உட்பட போலீசார் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.