sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு

/

நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு

நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு

நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கு கிராம மக்கள் பாராட்டு


ADDED : செப் 08, 2025 03:25 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ.,வுக்கு, கேடயம் வழங்கி , கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.

தஞ்சாவூர், மானாங்கோரையை சேர்ந்த விக்னேஷ்வரன், 30, திருவையாறு தாலுகா, திருவேதிகுடியில் வி.ஏ.ஓ.,வாக ஆக., 1 முதல் பணியாற்றுகிறார்.

கடந்த, 2022 மு தல், 2025 ஜூலை, 31 வரை தஞ்சாவூர், கொண்டவிட்டாந்திடல் கிராமத்தில் விக்னேஷ்வரன் வி.ஏ.ஓ., ஆக பணியாற்றினார். அவர், அக்கிராம மக்களுக்கு, பல்வேறு துறை சான்றிதழ்கள் கிடைக்க உதவியாகவும், நேர்மையாகவும் பணியாற்றினார்.

இதற்கு, கொண்டவிட்டாந்திடல் கிராம மக்கள், அவருக்கு நேற்று பாராட்டு விழா நடத்தினர். விழாவில், 'நேர்மையின் சிகரம்' என்ற வார்த்தை பொறித்த கேடயத்தை வழங்கினர்.

கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் விக்னேஷ்வரன் மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார். அவர் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு அரசின் திட்டங்களை தெரியபடுத்தி, வாய்ப்பை உருவாக்கி தந்தார்' என்றனர்.

விக்னேஷ்வரன் கூறுகையில், ''நேர்மையாக பணி செய்ய வேண்டும் என்பது என் லட்சியம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us