sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்

/

 பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்

 பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்

 பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்


ADDED : டிச 24, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: பழநிக்கு பாதயாத்திரையாக வெளிநாடு நகரத்தார் தைப் பூசத்திற்கு முன்பாகவே புறப்பட்டனர். செட்டிநாட்டு பகுதியிலிருந்து சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார் தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை செல்வதுண்டு.

பழநிக் காவடியுடன் இவர்கள் பாரம்பரியமாக பாதயாத்திரையாகவே செல்கின்றனர். இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் குழுவாக திருப்புத்துார் வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்றனர்.

நேற்று அதிகாலை பள்ளத்துாரில் யாத்திரை துவங்கி, மதியம் ந. வைரவன்பட்டியில் தங்கி மாலையில் திருப்புத்துார் வந்தனர்.

இவர்கள் டிச.28 ல் பழநியில் சாமி தரிசனம் செய்கின்றனர். காரைக்குடியைச் சேர்ந்த சிவனேசன் கூறுகையில், அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தாருக்கு தற்போது விடுமுறை காலம் என்பதால் முன்னதாகவே வந்து பழநியாத்திரை செல்கிறோம். 30 ஆண்டுகளாக இவ்வாறு செல்கிறோம். தற்போது யாத்திரையில் 60பேர் செல்கிறோம். 5 நாட்களில் பழநி சென்று சாமி தரிசனம் செய்வோம் என்றார்.






      Dinamalar
      Follow us