sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மறுப்புக்கு பின் அனுமதியால் நா.த., கட்சி கூட்டம் நடந்தது

/

மறுப்புக்கு பின் அனுமதியால் நா.த., கட்சி கூட்டம் நடந்தது

மறுப்புக்கு பின் அனுமதியால் நா.த., கட்சி கூட்டம் நடந்தது

மறுப்புக்கு பின் அனுமதியால் நா.த., கட்சி கூட்டம் நடந்தது


ADDED : மார் 18, 2024 03:19 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெகதீசபாண்டியன் அறிமுக கூட்டம் நேற்று நடத்த, அக்கட்சியினர் திட்டமிட்டனர்.

இதற்கு நேற்று முன்தினம் இரவு முதல் மேடை அமைக்கப்பட்டு, கடலுார் நெடுஞ்சாலையோரம் இருபுறமும் கட்சிக்கொடி, வாழப்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஆனால் நேற்று முன்தினம் மாலை, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால், தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து, வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வாழப்பாடி போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். இதனால் மேடை, கட்சிக்கொடிகள், போஸ்டர் உள்ளிட்ட முழுதையும், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் அகற்றினர்.

இதற்கு பின் உரிய அனுமதி பெற்று, வாழப்பாடியில் கூட்டம் நடந்தது. அதில் ஜெகதீசப்பாண்டியன் பேசினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us