sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கையுறையின்றி கழிவுகளை அகற்றும் ராமநாதபுரம் துாய்மைப் பணியாளர்கள் கேள்விக்குறியாகும்  பாதுகாப்பு

/

 கையுறையின்றி கழிவுகளை அகற்றும் ராமநாதபுரம் துாய்மைப் பணியாளர்கள் கேள்விக்குறியாகும்  பாதுகாப்பு

 கையுறையின்றி கழிவுகளை அகற்றும் ராமநாதபுரம் துாய்மைப் பணியாளர்கள் கேள்விக்குறியாகும்  பாதுகாப்பு

 கையுறையின்றி கழிவுகளை அகற்றும் ராமநாதபுரம் துாய்மைப் பணியாளர்கள் கேள்விக்குறியாகும்  பாதுகாப்பு


ADDED : டிச 24, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள் கையுறை, முகக்கவசம் அணியாமல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ராமநாதபுரம் நகரில் உள்ள 33 வார்டுகளில்பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.

குழாய்கள் சேதமடைந்து பல இடங்களில் கழிவுநீர் தேங்கியும், ரோட்டில் ஒடி ஊருணிகளில் கலக்கிறது.

அவ்விடங்களை கண்டறிந்து கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது போன்று தெருக்களில் குப்பை அகற்றும் பணியிலும் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்கள் கையுறையின்றியும், முகக்கவசம் அணியாமல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

துாய்மை பணியாளர்களின் நலனில் அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே ஊரை சுத்தம் செய்யும் துாய்மைப் பணியாளர்களை பாதுகாக்க அவர்களுக்குரிய முககவசம், கையுறை போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us