/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெருங்கி பழகி ஏமாற்றிய காதலனை கைது செய்யக்கோரி பெண் ஐ.டி.,ஊழியர் தர்ணா
/
நெருங்கி பழகி ஏமாற்றிய காதலனை கைது செய்யக்கோரி பெண் ஐ.டி.,ஊழியர் தர்ணா
நெருங்கி பழகி ஏமாற்றிய காதலனை கைது செய்யக்கோரி பெண் ஐ.டி.,ஊழியர் தர்ணா
நெருங்கி பழகி ஏமாற்றிய காதலனை கைது செய்யக்கோரி பெண் ஐ.டி.,ஊழியர் தர்ணா
ADDED : டிச 24, 2025 05:28 AM

ராமநாதபுரம்: பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திர இளம் பெண் தன்னுடன் நெருங்கி பழகி ஏமாற்றியராமநாதபுரத்தை சேர்ந்த காதலனை கைது செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர்சரஸ்வதி 28. இவர் பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கோபி வேலுாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இரு வரும் காதலித்து நெருங்கி பழகினர்.
கோபி தன்னை ஏமாற்றி தலைமறைவானதாகசரஸ்வதி, வேலுார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும்ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சரஸ்வதி டிச.,21ல் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள கோபியின் வீட்டுக்கு வந்துள்ளார். இவர் வந்ததை அறிந்த கோபியின் குடும்பத்தார் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிவிட்டனர்.
இதனை கண்டித்து அன்றிரவுவீட்டின் முன்பு சரஸ்வதி தர்ணா போராட்டம் செய்தார். அப்போது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
நேற்று சரஸ்வதி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மனைவி போல வாழ்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து தலைமறைவான கோபி, அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் பட்டினி கிடந்து உயிர்விடுவேன் எனக் கூறினார்.
கோபி மீது வழக்கு பதிந்துள்ளோம். அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என போலீசார் உறுதி யளித்தனர்.
இருப்பினும் சரஸ்வதி ஏற்கவில்லை. அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுகேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

