sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு

/

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு


ADDED : ஏப் 06, 2025 07:01 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை சார்பாக, மளிகை கடை வைத்துக் கொடுத்தனர். இதற்கு பொதுமக்கள் பலர் பாரட்டுக்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா, 38, இவர் முற்றிலும் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும், இவருக்கு அரசு சார்பில் எந்த விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிலை என கூறப்படுகிறது.

தொடர்ந்து, ரேணுகாவிற்கு ஒரு தொண்டு நிறுவனம் சார்பில், நான்கு சக்கரம் பேட்டரி சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இவரது சகோதரியும், அவரது கணவரும் இறந்து விட்டனர். இந்த தம்பதிகளின் மகன் முகிலேஷ், 8, என்பவரை ரேணுகா வளர்த்து வருகிறார்.

மேலும், வயதான தாய், தந்தையுடன் ஒரு தென்னை கீற்று வேய்ந்த ஒரு சிறிய வீட்டில் ரேணுகா வசித்து வருகிறார். இவர்களின் அன்றாட குடும்ப செலவிற்கும், மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் இருந்து வருகின்றனர்.

இதனை அறிந்த, புதுக்கோட்டை 9ஏ., நத்தம் பண்ணை பகுதியில் உள்ள சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை சார்பாக, முற்கட்டமாக, நேற்று 20 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாங்கி அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, அவரது வீட்டிற்கு முன்பாக, ஒரு மளிகை கடை வைத்து கொடுத்தனர்.மேலும், அடுத்தடுத்து உதவிகள் வழங்குவதாக அந்த அறக்கட்ளையின் நிறுவனர் தீபாபிரபு தெரிவித்தார்.

மளிகை கடை திறப்பு விழாவில், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜா, செல்வராஜ், நித்தியா, சரவணன் மற்றும் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைத்து கொடுத்து, வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து கொடுத்த சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பலர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us