/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வயநாடு மக்களுக்காக மொய் வசூல் கலெக்டரிடம் வழங்கிய டீக்கடைக்காரர்
/
வயநாடு மக்களுக்காக மொய் வசூல் கலெக்டரிடம் வழங்கிய டீக்கடைக்காரர்
வயநாடு மக்களுக்காக மொய் வசூல் கலெக்டரிடம் வழங்கிய டீக்கடைக்காரர்
வயநாடு மக்களுக்காக மொய் வசூல் கலெக்டரிடம் வழங்கிய டீக்கடைக்காரர்
ADDED : ஆக 28, 2024 12:03 PM
புதுக்கோட்டை:வயநாடு மக்களுக்காக, புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தி வசூல் செய்த பணத்தை, டீக்கடை உரிமையாளர், மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.
புதுக்கோட்டை அருகே வம்பன் நால்ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர், சிவக்குமார். இவர் கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பல இக்கட்டான காலகட்டங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மொய் விருந்து விருந்து நடத்தி நிதி அளித்து வருகிறார்.அதேபோன்று, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதி மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில், சில தினங்களுக்கு முன், தனது டீக்கடைகளில் மொய் விருந்து நடத்தினார்.
அன்றைய தினம், இலவசமாக டீ வழங்கி, அவர்களால் முடிந்த தொகையை மொய் செலுத்த வைத்தார். அன்றைய தினம், 43 ஆயிரத்து 200 ரூபாய் வசூலானது.அந்த பணத்தை டி.டி.,யாக எடுத்து, வயநாடு பகுதி மக்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அருணா-விடம் நேற்று வழங்கினார். சிவக்குமாருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

