/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எச்.ஐ.வி., நோய் தொற்று விழிப்புணர்வு
/
எச்.ஐ.வி., நோய் தொற்று விழிப்புணர்வு
ADDED : ஆக 30, 2025 01:26 AM
நாமக்கல், நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட, 300க்-கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. மேலும், பயணியர் ஆட்டோக்களில், விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினார்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கத்தை திறந்து வைத்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உட்பட தனியார் நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.