ADDED : செப் 07, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 4 போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிவோருக்கு மில்கேட்டில் பயிற்சி முகாம் நடந்தது.
டி.எஸ்.பி., சிவக் குமார் தலைமை வகித்தார். மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் காஞ்சனா முன்னிலை வகித்தார். சி.பி.ஆர்., எனும் இதயத் துடிப்பு உயிர்ப்பித்தல் சிகிச்சை குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் மணிகண்டன், சீமா பயிற்சி அளித்தனர்.