sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம் அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு

/

ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம் அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு

ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம் அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு

ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவக்கம் அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு


ADDED : செப் 17, 2025 07:37 AM

Google News

ADDED : செப் 17, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் அருகே வெள்ளலுாரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனாக அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கோயில் திருவிழா வெள்ளலுார், உறங்கான்பட்டி உள்ளிட்ட 60 கிராமத்தினர் கொண்டாடும் வெள்ளலுார் நாட்டின் திருவிழாவாகும். முக்கிய நிகழ்வான 7 சிறுமிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று கோயில் வீட்டு முன் நடந்தது. பூஜாரி சின்னதம்பி 7 சிறுமிகளை தேர்வு செய்தார். இவர்கள் 15 நாட்கள் கோயில் வீட்டில் தங்கி இருப்பர். பிறகு கிராமங்களுக்கு சென்று ஆசிர்வதிப்பார்கள். இந்நாட்களில் பொதுமக்கள் எண்ணெய் தாளிதம் இல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடும் விரதம் இருப்பர்.

செப். 26 ல் பானை வைத்து ஆடுதல் (பானையில் இருக்கும் நெல்லை எடுப்பது), செப்.28 ல் அம்பலச்சோறு நிகழ்ச்சியும், 15 நாள் முடிவான செப்.30 ஏழு சிறுமிகள் முன்னே நடந்து செல்ல அம்பலகாரர்கள் தலைமையில் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வார்கள். அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டியவர்கள் பதுமைகளை சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து அக்.1 ல் தேரோட்டம், அக்.2 மஞ்சள் நீராட்டும் மற்றும் அக்.7 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா தோன்றிய வரலாறு // வெள்ளலுார் நாட்டை சேர்ந்த அக்கா, தங்கையில் தங்கைக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளை தன் குழந்தைகளாக பாவித்து அக்கா வளர்த்தார். இதனால் தன் குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விடுமோ என்று பயந்து அக்கா தேடிவந்த போது குழந்தைகளை கூடைக்குள் மறைத்து வைத்து விட்டு வெளியே சென்றதாக பொய் சொன்னார் தங்கை. அக்கா சென்ற பிறகு கூடையை திறந்து பார்த்த போது ஏழு குழந்தைகளும் கல்லாக மாறியிருந்தனர். பின்னர் ஏழை காத்தம்மனை வேண்டியதால் குழந்தைகள் உயிர் பெற்றதாக ஐதீகம். இந் நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக இத்திருவிழா நடக்கிறது.








      Dinamalar
      Follow us