நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.ஐ.ஜி., ஆய்வு
மேலுார் : மேலூரில் போக்குவரத்து மற்றும் கீழவளவு போலீஸ் ஸ்டேஷன்களை டி.ஐ.ஜி., அபிநவ்குமார் ஆய்வு செய்தார். ஆவணங்கள் பராமரிப்பு, பதிவு செய்யப்பட்ட, தீர்வு காணப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., சிவக் குமார், இன்ஸ்பெக்டர் கருப்பசாமி உடனிருந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: வில்லாபுரம் மீனாட்சி நகர் அர்ஜூன் 25. வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.
விவசாயி பலி
மேலுார் : வண்ணாம்பாறைபட்டி விவசாயி கண்ணன் 25. நேற்று முன்தினம் மாலை மேலுாருக்கு சென்றவர், சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். ஆட்டுக்குளம் செல்வி நகர் அருகே எதிரே வந்த கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்

