/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளாஸ்டிக்கால் கடல் மாசு படுவதாக வழக்கு : பதில் கோரும் உயர்நீதிமன்றம்
/
பிளாஸ்டிக்கால் கடல் மாசு படுவதாக வழக்கு : பதில் கோரும் உயர்நீதிமன்றம்
பிளாஸ்டிக்கால் கடல் மாசு படுவதாக வழக்கு : பதில் கோரும் உயர்நீதிமன்றம்
பிளாஸ்டிக்கால் கடல் மாசு படுவதாக வழக்கு : பதில் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : செப் 17, 2025 07:00 AM
மதுரை : கன்னியாகுமரி மாவட்ட கடலில் மீன் பிடிக்க பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தி மாசுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இனயத்தை சேர்ந்த லெனின் தாக்கல் செய்த பொதுநல மனு:
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் முதல் தேங்காப்பட்டணம் கடல் பகுதி வரை கணவாய் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சிலர் விதிகளுக்கு புறம்பாக பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், தென்னை மட்டைகள், தென்னை நார்கள், மணல் மூடைகளை கடலில் போடுகின்றனர். அம்மீன்களை பிடிக்கின்றனர். கடல் மாசுபடுகிறது. மீன்களின் வயிற்றில் பிளாஸ்டிக் துகள்கள் செல்கிறது. அம்மீன்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு நோய் ஏற்படுகிறது. மீனவர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தி கடலை மாசுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை கோரி கலெக்டர், மீன்வளத்துறை துணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்பிரசாந்த் ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், மீன்வளத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் அக்.9ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.