/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
/
வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி 'சொர்க்கவாசல்' திறப்பு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 31, 2025 06:29 AM

கிருஷ்ணகிரி: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில், 'பரமபத வாசல்' என்ற 'சொர்க்கவாசல் திறப்பு' நேற்று நடந்தது.
இதையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதி நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்-கார, பூஜை நடந்தது. அதிகாலை, 4:40 மணிக்கு, சீதேவி, பூதேவி சமேத நவநீத வேணுகோபால சுவாமி, சொர்க்க வாசல் வழியாக வந்தார். அப்-போது பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோவில், பழைய-பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நர-சிம்ம சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி சன்-னதி, அக்ரஹாரம் அம்பா பவானி கோவில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாயமலை சென்-றாய பெருமாள் சுவாமி கோவில் என பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில் பக்தர்களுக்கு லட்டு பிர-சாதம் வழங்கப்பட்டது.
* தேன்கனிக்கோட்டை சவுந்தர்யவல்லி சமேத பேட்டராயசுவாமி கோவிலில், அதிகாலை, 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவ மூர்த்தி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்-தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தட்சிண திருப்பதி என அழைக்கப்படும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில், பாத்-தக்கோட்டா சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சப்-படி ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களில், நேற்று சொர்க்கவாசல் திறக்கப்-பட்டது.
அதேபோல், ஓசூர் கோகுல் நகர் அருகே ரங்கோ-பண்டித அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி சத்ய-பாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், கோகுல்நகர் நந்தனம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்-வரர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள பிர-சன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ஆகிய-வற்றில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, தோமாலை சேவை, திருப்பள்ளி எழுச்சி, உற்சவம், திருப்பாவை, சாற்றுமுறை, சர்-வதரிசனம் நடந்தது

