/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 444 பேர் மனு அளிப்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 444 பேர் மனு அளிப்பு
ADDED : டிச 23, 2025 05:36 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இல-வச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவி தொகை, திருமண நிதியு-தவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்-தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 444 பேர் மனுக்கள் அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு, 10,250 ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள், ஒரு பயனாளிக்கு, 1,250 ரூபாய் மதிப்பீட்டிலான மடக்கு குச்சி, கண்ணாடி, 2 பயனாளிகளுக்கு தலா, 2,875 ரூபாய் மதிப்பீட்டி-லான காதொலி கருவி என மொத்தம் ஆறு பேருக்கு, 27,250 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, உதவி கமிஷனர் கலால் முரு-கேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

