sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பஸ்சுக்கு 'பாடி' கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

/

பஸ்சுக்கு 'பாடி' கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

பஸ்சுக்கு 'பாடி' கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

பஸ்சுக்கு 'பாடி' கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து


ADDED : ஆக 31, 2025 07:02 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 பழைய பஸ்களின் கூடுகள் எரிந்து நாசமாயின.

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் முருகன், 58; கோடங்கிப்பட்டி அருகே பெருமாள் பட்டியில், பழைய பஸ்களை வாங்கி உடைத்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தில், நேற்று மாலை, 4:30 மணியளவில் பழைய பஸ்சில் இருந்து சீட்டுகளை, வெல்டிங் வைத்து இரும்புகளை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சீட் பகுதி பஞ்சில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றும் பலமாக வீசியதால் மளமளவென தீ பரவியது. இதுகுறித்த தகவலின் படி வந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 16 பழைய பஸ்களின் கூடுகள் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us