sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறித்து தகவல் இல்லை மக்கள் பங்கேற்க முடியாத நிலை

/

 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறித்து தகவல் இல்லை மக்கள் பங்கேற்க முடியாத நிலை

 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறித்து தகவல் இல்லை மக்கள் பங்கேற்க முடியாத நிலை

 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறித்து தகவல் இல்லை மக்கள் பங்கேற்க முடியாத நிலை


ADDED : டிச 24, 2025 06:40 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பற்றி எந்த தகவலும் வெளியிடாததால், இக்கூட்டத்தில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல், சேவை குறைபாடு, வினியோகஸ்தர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான புகார் என, பல்வேறு பிரச்னைகள் பற்றி இக்கூட்டத்தில் நேரடியாக தெரிவிக்க முடியும்.

ஆயுர் கார்ப்பரேஷன் சார்பில், நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இக்கூட்டத்தில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று, நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

ஆனால், இக்கூட்டம் என்றைக்கு நடைபெறுகிறது என்ற எந்த தகவல்களும், மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் தெரிவிப்பதில்லை. இதனால், அப்பகுதியில் வசிப்போர் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போகிறது.

அதிகாரிகள், நுகர்வோர் சங்கங்கள் சிலவற்றுக்கு மட்டுமே போனில் தகவல் தெரிவித்து, இக்கூட்டத்தை கண்துடைப்பாக நடத்துவதாக புகார் எழுகிறது.

அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்கும் வகையில், முந்தைய ஆண்டுகளில் இக்கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

எரிவாயு சிலிண்டர் பற்றிய புகார்களை நேரடியாக தெரிவிக்க, இக்கூட்டம் நடைபெறும் நாள் விபரத்தை, வழங்கல் துறை அதிகாரிகள் முன் கூட்டியே தெரிவிக்க, எரிவாயு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us