sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கல்லுாரி அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்

/

 கல்லுாரி அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்

 கல்லுாரி அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்

 கல்லுாரி அதிகாரி மீது மாணவி பாலியல் புகார்


ADDED : டிச 24, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவி, குன்றத்துாரில் உள்ள மாதா பல் மருத்துவமனையின் விடுதியில் தங்கி, பல் மருத்துவம் படித்து வருகிறார். இவர், குன்றத்துார் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:

கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக, விடுதி பொறுப்பாளர் ஜான்சி வலியுறுத்தியதால், கல்லுாரி நிர்வாக அதிகாரி ராமமூர்த்தியை நேரில் சந்தித்தேன்.

அப்போது, அவர் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு என்னை அழைத்து சென்று, தன்னிடம் நெருங்கி பழகினால், உதவி செய்கிறேன் என கூறினார்.

மேலும், இதை பற்றி பிறரிடம் சொன்னால், மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார். நான் ஒரு மாணவி என்றும் பாராமல், அவரோடு 'அட்ஜஸ்ட்' செய்யுமாறு, தகாத வார்த்தையில் பேசி மிரட்டிய கல்லுாரி நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி மீதும், உடந்தையாக இருந்த ஜான்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையடுத்து, குன்றத்துார் போலீசார் ராமமூர்த்தி மற்றும் ஜான்சி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us