sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு

/

 உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு

 உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு

 உடல் உறுப்பு தானத்திற்கு காஞ்சியில் 53 பேர் பதிவு


ADDED : டிச 24, 2025 06:35 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, இறை துளிகள் இயக்கம், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம், காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்த ரத்ததான முகாமில், 53 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த இந்நிகழ்ச்சியை சங்க தலைவர் தன்யகுமார் துவக்கி வைத்து, ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சங்க செயலர் முத்துகுமரன், நிலைய மருத்துவ அதிகாரி சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி அதிகாரி பாஸ்கோ பிரேம்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததானம் செய்ய வந்தோருக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டனர்.

இம்முகாமில், மருத்துவர் பார்த்தசாரதி, காஞ்சியில் இலவச அரசு பணித்தேர்வு பயிற்சி வகுப்பு நடத்திவரும் எழிலன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

மருத்துவர் புஷ்பம், சங்க செயலர் மருத்துவர் முத்துக்குமரன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 53 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us