sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுகாவேரியில் சகதியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

சிறுகாவேரியில் சகதியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

சிறுகாவேரியில் சகதியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

சிறுகாவேரியில் சகதியான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 25, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுகாவேரிபாக்கம்:மண் சாலையாக உள்ள சிறுகாவேரிபாக்கம், குறிஞ்சி நகர் பிரதான சாலைக்கு, தார் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சகதியான சாலையில் வாக ன ஓட்டிகள் செல்ல அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றி யம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் உள்ள பச்சையம்மன் கோவில் பின்பக்கம் குறிஞ்சி நகர் உள்ளது. புத்தேரி ஊராட்சி மேட்டு நகரில் இருந்து, விநாயகபுரம், பச்சையம்மன் கோவில், பத்மாவதி நகர் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் குறிஞ்சி நகர் வழியாக சென்று வருகின்றனர்.

இருப்பினும் குறிஞ்சி நகர் பிரதான சாலை, மண் சாலையாக இருப்பதால், லேசான மழைக்கே சகதியான சாலையாக மாறிவிடுகிறது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குறிஞ்சி நகரில், மண் சாலைக்கு, தார் சாலை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து ள்ளது.






      Dinamalar
      Follow us