/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை முறை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
இயற்கை முறை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 24, 2025 05:41 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கடந்த 25 ஆண்டு களுக்கு முன்பு வரை வயல்களை உழுது தழைச்சத்து மற்றும் சான எருக்களை கொண்டு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்தனர். காலப்போக்கில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்து அதிகரிப்பால் இயற்கை முறையில் இருந்து விலகிச் சென்றனர்.
நெல் மற்றும் காய்கறிகள் உட்பட அனைத்து பயிர்கள் மகசூலுக்காக, அதிகளவில் உரம் மற்றும் பூச்சி மருந்தினை பயன்படுத்து வதால், அதனை உட்கொள்ளும் நபர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுகிறது.
இதனால், சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் பாரம்பரிய முறையிலான இயற்கை விவசாயத்திற்கு மாறி தற்போது தழைச் சாத்து, சாண எருவினைக் கொண்டு இயற்கை முறை விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

