/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருநாவலுார் அருகே மணல் கடத்தல் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : டிச 24, 2025 05:40 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பா.கிள்ளனுார் அருகே கெடிலம் ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை 4:30 மணியளவில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போத அங்கு 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியவர்கள் தப்பியோடினர். போலீசார், அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து, பிள்ளையார்குப்பம் ஆறுமுகம், 41; மேட்டத்துார் செந்தில், 30; கெங்கம்பாளையம் கோவிந்தன், 65; ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

