/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறியில் முழு அளவு பள்ளி சீருடை உற்பத்தி முதல்வரிடம் நெசவாளர்கள் வலியுறுத்தல்
/
விசைத்தறியில் முழு அளவு பள்ளி சீருடை உற்பத்தி முதல்வரிடம் நெசவாளர்கள் வலியுறுத்தல்
விசைத்தறியில் முழு அளவு பள்ளி சீருடை உற்பத்தி முதல்வரிடம் நெசவாளர்கள் வலியுறுத்தல்
விசைத்தறியில் முழு அளவு பள்ளி சீருடை உற்பத்தி முதல்வரிடம் நெசவாளர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோடு வருகை புரிந்த முதல்வர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பாளர்கள் ஜெகநாதன், ரமேஷ், கந்தவேல் ஆகியோர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
இலவச வேட்டி, சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி செய்யும் விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு, இந்தாண்டு கூலி உயர்வு வழங்கப்பட்டது. 50 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டமாக, 2,000 சாதா விசைத்தறிகளை, நாடா இல்லா விசைத்தறிகளாக மாற்ற, 15 கோடி ரூபாய் மானியம், பழைய ரேப்பியர் தறிகளை மாற்றி புதிய ரேப்பியர் தறியாக்க நெசவாளர்களுக்கு, 15 கோடி ரூபாய் மானியம், புதிய தானியங்கி தறிகளை கொள்முதல் செய்ய, 15 கோடி ரூபாய் மானியம் மற்றும் சி.எப்.சி., அமைக்க, 5 கோடி ரூபாய் மானியத்தை அரசு ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
தமிழக அரசு சத்துணவு சாப்பிடும், 1 முதல், 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 4 செட் இலவச பள்ளி சீருடை வழங்குகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு 4 முதல், 6 மாதங்கள் வரை விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இலவச சீருடை உற்பத்தியில், விசைத்தறியில் காஸ்மட் எனப்படும் ரகம் மட்டும், 66 லட்சம் மீட்டர், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், கைத்தறி மற்றும் பெடல் தறி, விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை டிரில், செர்ட்டிங் துணி வகைகள் தானியங்கி தறியில் நெசவு செய்யப்
படுகிறது.
ஆட்டோ லுாம்களில் உற்பத்தி செய்யப்படும், 3.14 கோடி மீட்டர் பள்ளி சீருடை துணியை, வரும் ஆண்டு முதல் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் வகையில், ஸ்ட்ரைப் வடிவில் மாற்றம் செய்து வழங்க வேண்டும். இதன் மூலம் மேலும், 6 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் லட்சக்கணக்கான நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். மேலும் விசைத்தறி கணக்கெடுப்பு, இ-மார்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும். இதன் மூலம் விசைத்தறியாளர்கள் மேம்பட வாய்ப்பும், திட்டங்களும் உருவாகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

